பொத்துவில் பிரதேசத்தில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் நேற்று பலியான அலியார் முஹம்மது மஹ்ஜுனின் ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை காலை பொத்துவில் கடற்கரை மையவாடியில் ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் எம்.ஏல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத், எம்.ஏ.அப்துல் மஜீட் மற்றும் ஏ.எம். ஜெமீல் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மரணமடைந்த அலியார் முஹம்மது மஹ்ஜுன் (வயது 32) இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் எம்.ஏல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத், எம்.ஏ.அப்துல் மஜீட் மற்றும் ஏ.எம். ஜெமீல் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மரணமடைந்த அலியார் முஹம்மது மஹ்ஜுன் (வயது 32) இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
