Aug 13, 2011

வாழைச்சேனை மர்ம மனிதனை இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி ஆர்பாட்டம் செய்தார்களா ?


கிறிஸ் மனிதன் தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர வாழைச்சேனையில் மர்ம மனிதனை இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி பொலிசாருக்கு எதிராக வாழைச்சேனை மக்கள் ஆர்பாட்டம் செய்தார்கள் என்று தெரிவித்துள்ளார்என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் தெரிவித்துள்ளத்தில் கிறிஸ் மனிதன் என்ற வதந்தி திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
எனவே, இத்தகைய வதந்தியை மக்கள் நம்பவேண்டாமெனவும் இவ்வாறான போலி வார்த்தைகளை உச்சரிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பொதுமக்களிடமும், ஊடகங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிறிஸ் மனிதன் எனும் பெயரில் போலி நாடகமாடிய 47 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 47 பேரில் பெரும்பாலானோர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். இவர்கள் போதை மயக்கத்திலும் அச்சமயம் கொண்டிருந்த மனநிலை மற்றும் காமக்குரோதம் காரணமாகவும் பெண்களை தாங்கள் பயமுறுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன்
வாழைச்சேனையில் கைது செய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அவரை பிரதேசவாசிகள் இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்று கூறியே பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

About Me

My photo
Share the information which attract me.

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.