Aug 16, 2011

மலசலகூடத்துள் மறைந்திருந்த மர்ம மனிதர்: பெண் மீது தாக்குதல்

அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் குடும்ப பெண்ணொருவர் நேற்று மாலை மர்மமனிதர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கோளாவில் இரண்டாம் பிரிவு குமார் கடை வீதியிலுள்ள ஒருபிள்ளையின் தாயாரான ஜெகன் சோதிமலர் (20) என்பவரே மர்ம மனிதனின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். 

அவரது வீட்டிலுள்ள மலசல கூடத்திற்கு சம்பவ தினம் மாலை 3 மணியளவில் சென்றபோது மலசல கூடத்திற்குள் மறைந்திருந்த இரு மர்ம மனிதர்கள் அவரை பிடித்து கை, கால்களை கம்பியினால் கட்டி வாயை சலோரேப்பினால் ஒட்டிய போது அருகிலுள்ள வீட்டின் பெண் ஒருவர் கண்டு கூச்சலிட்டதையடுத்து மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இச்சம்பவத்தில் குறித்த பெண் சிறுகாயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் மீது பொது மக்கள் கல்வீச்சு நடாத்தியதையடுத்து கலகமடக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களை தடியடிபிரயோகம் செய்து கலைத்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதேச மக்கள் பெரும்அச்சமும் பீதியுமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலசலகூடத்துள் மர்ம மனிதர்: பெண் மீது தாக்குதல் (படங்கள்)

About Me

My photo
Share the information which attract me.

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.