Aug 13, 2011

கிரீஸ் மனிதர்களின் அட்டகாசமும் சிவில் சமூக அவதானமும்….!


கடந்த பல தினங்களாக நாட்டின் பல பாகங்களிலும் கிரீஸ் மனிதர்களின்அட்டகாசம் அதிகரித்து வந்துள்ளமையால் மக்கள் பீதியும் அச்சமும் கொண்டுள்ளனர்,
குறிப்பாக மாதர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப் படும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள அதே வேளை பாது காப்பு தரப் பினரால் காத்திரமான் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படாமையும் , கைது செய்யப்படுபவர்கள் மன நிலை பாதிக்கப் பட்டவர்கள் என விடுதலை செய்யப்படுவதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் நம்பிக்கையீனத்தையும் உண்டாக்கியுள்ளது.
இந்த நிலைமையில் முஸ்லிம்கள் பிற சமூகங்களோடு கூட்டாகவும் தனித்தும் தமது பாது காப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும், வெறுமனே அரசியல் வாதிகளையோ, பிரபலங்கலையோ ,கொழும்பிலுள்ள அமைப்புகளையோ மாத்திரம் நம்பியிராது சிவில் சமூக கூட்டு நடவடிக்கைகளை சகல இயக்க கட்சி குழு வேறுபாடுகளுக்கப்பால் எடுக்க முன்வர வேண்டும்.
அந்த வகையில் குறிப்பாக இன்றைய ஜும்மா குத்பாக்களில் உலமாக்கள் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசன்களைப் பெற்று மிகவும் பொறுப்புடனும், நிதானமாகவும் மக்களை அறிவுறுத்தல் வேண்டும், தொழுகையில் குனுத் ஓதி எல்லாம் வல்ல இறைவனிடம் நமது பாது காப்பிற்காக கரமேந்துவதொடு, தீய சக்திகளை அழித்து ஒழித்து சகல சமூகங்களின் சமாதான சக வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஜும்மா தொழுகையின் பின்னர் அல்லது கூடிய விரைவில் ஒவ்வொரு மகால்லவிலும் சகல தரப்புகளையும் கொண்ட “மஜ்லிஸ் அல் ஷூரா” க்களை அமைத்துக் கொள்ளுவதன் மூலம் தமது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் ,சமூக பொருளாதார வாழ்விற்கும் விடுக்கப் படுகின்ற எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராக வேண்டும்.
இந்த நாட்டின் பிரஜைகள் நாம் எத்தகைய தீய சக்திக்கும் அஞ்சி வாழ வேண்டிய அவசியம் கிடையாது…அடுத்த சமூகங்களுடன் எப்பொழுதும் போல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதோடு குறித்த பிரச்சினையில் அக்கம் பாக்கத்திலுள்ள அடுத்த மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகளையும் கலந்து பேசி தீய சக்திகளை ஒழித்துக் கட்ட அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள /கொல்ல நாம் மிகவும் சமயோசிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக ஊடக வியலாளர்கள் தமது சமூகப் பொறுப்பை சரிவரச் செய்வதன் மூலம் இந்த செய்தியை உரிய தரப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர் பார்ப்பதோடு இவ்வாறான அறிவுறுத்தல்களை வாசிக்கும் ஏனைய சகோதரர்களும் தமது ஊர் ஜமாத்துகளின் அவதானத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

About Me

My photo
Share the information which attract me.

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.